போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார்…? செய்தியால் பரபரப்பு

Spread the love

ஆறு மாதங்களில் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.


லண்டன்

கொரோனாவிலிருந்து விடுபட திணறுவதால், ஆறு மாதங்களில் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.அதுவும், இந்த தகவலை வெளியிட்டவர் பிரதமரின் ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸ் மாமனாரான ஹம்ப்ரி வேக்ஃபீல்ட் (84) தெரிவித்தார் என்பதால், அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது.

ஆனால், இன்று அவசர அவசரமாக பிரதமர் இல்லம் இந்த தகவலை மறுத்துள்ளது. போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாதத் துவக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் செலவிட்டார்.

கொரோனா தொற்றுக்கு ஆளான பலரும் அதன் தாக்கத்தால் இன்னமும் அவதியுற்று வருவதால், மக்களில் சிலர் இந்த செய்தியை நம்பியிருக்கலாம்

இதற்கிடையில், ஹம்ப்ரி இப்படி ஏடாகூடமாக அறிக்கைகள் வெளியிட்டு குழப்பம் ஏற்படுத்துவது இதுமுதல் முறையல்ல. ஏற்கனவே, இங்கிலாந்து உள்துறைச்செயலரான பிரீத்தி பட்டேலை அவர் இதேபோல் வம்புக்கிழுத்ததால் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page