எச்.வசந்தகுமாரின் அவர்களுக்கு பனங்காட்டு மக்கள் கழகம்  தலைவர் SA சுபாஷ் பண்ணையார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்!

Spread the love

காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்கு  பனங்காட்டு மக்கள் கழகம் தலைவர்SA சுபாஷ் பண்ணையார்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த எச்.வசந்தகுமாரின் அவர்களுக்கு பனங்காட்டு மக்கள் கழகம்  தலைவர் SA சுபாஷ் பண்ணையார் தி.நகர் நடேசன் தெ௫வில்* உள்ள அண்ணாச்சி அவர்களின் இல்லத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.கன்னியாகுமரி மாவட்டம் – அகத்தீசுவரத்தில் பிறந்த வசந்த்குமார் அண்ணாச்சி  தொடக்கத்தில் வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி புரிந்தார். பின்பு மளிகை கடையைத் தொடங்கி, படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளராகத் திகழ்ந்தவர். வசந்த் தொலைக்காட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.எச்.வசந்தகுமார் அண்ணாச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகவும், முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் அண்ணாச்சி அவர்கள், தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக மிகச் சிறப்பாக மக்கள் பணியாற்றி வந்தார்.உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் அண்ணாச்சி அவர்கள், உறுதியான காங்கிரஸ் தலைவர். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர் . இவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு இழப்பாகும்.வசந்தகுமார் அண்ணாச்சி அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சி தோழர்களுக்கும், பனங்காட்டு மக்கள் கழகதின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page