சி.ஏ. தேர்வு நவம்பர் மாதத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் – ஐசிஏஐ விளக்கம்

Spread the love

சி.ஏ. தேர்வுகள் தள்ளிவைக்கப்படவில்லை என்று இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு (ஐசிஏஐ) விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

சி.ஏ. சேர்வதற்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த பவுண்டேசன் கோர்ஸ் என்பது பிளஸ்-டூ முடித்தவர்கள் எழுதலாம் என இருந்தது தற்போது அது தற்போது 10 ஆம் வகுப்பு படுத்தவர்களும் எழுதலாம் என கூறப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே ஆடிட்டர் படிப்பில் சேரலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் (இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா) அறிவித்துள்ளது.

புதிய நடைமுறையை இந்தாண்டே அமல்படுத்துவதாக பட்டய கணக்காளர் மையம் தெரிவித்துள்ளது. சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற நடைமுறையை மாற்றப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நாடு முழுவதும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிஏ தேர்வுகள் தள்ளிவைக்கப்படவில்லை என்று இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு (ஐசிஏஐ) விளக்கம் அளித்துள்ளது. இந்திய கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் சார்பில் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு (சிஏ) ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டுக்கான தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. பிறகு பீகார் தேர்தல் காரணமாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது சிஏ தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதனிடையே அடுத்த ஆண்டு ஜனவரி வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் வெளியான தகவலை இந்திய கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு மறுத்துள்ளது. இதுபற்றிய விளக்கத்தை டுவிட்டர் பக்கத்தில் ஐசிஏஐ பதிவிட்டுள்ளது.

சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. ஒரே ஷிஃப்ட்டில் மதியம் 2 மணிக்குத் தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page