மனிதர்களின் சூழலுக்கு எதிரான செயல்களால் இயற்கை பாதிப்படைந்து வருகிறது – ஐநா சபை

Spread the love

மனிதர்களின் சூழலுக்கு எதிரான செயல்களால் நாளுக்கு நாள் இயற்கை பாதிப்படைந்து வருகிறது என ஐநா சபை கூறியுள்ளது.

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் கடந்த 7 மாதங்களாக உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உடல்நல பாதிப்புகள் மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் பல்வேறு சிக்கல்களை உலகம் சந்தித்தது. இந்நிலையில் வரும் காலத்தில் இன்னும் பல தொற்று நோய்களை உலகம் சந்திக்க உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐநா சபை,

மனிதர்களின் சூழலுக்கு எதிரான செயல்களால் நாளுக்கு நாள் இயற்கை பாதிப்படைந்து வருகிறது. கொரோனா வைரஸ் போன்றே 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைரஸ் கிருமிகள் விலங்குகளிடம் உள்ளன. இவைகளால் மனிதர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 4 கோடியே 55 லட்சத்து 29 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page