நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

Spread the love

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை நேற்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

 

முன்னதாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தியையொட்டி அங்குள்ள, தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் நிருபர் களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறும்போது, ‘தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. மக்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மீண்டும் 2-வது முறையாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும். இதுவரை பிளஸ்-2 முடித்த 9 ஆயிரத்து 438 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page