கேரளா – கர்நாடகம்- அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு

Spread the love

கேரளா,கர்நாடகம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன.


திருவனந்தபுரம்:

கேரளாவில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. என்றாலும் அங்கு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வருகிற 4-ந் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடந்த வகுப்புகளில் கற்பிக்கப்பட்ட பாடங்கள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தது.

குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2- மாணவர்களை பொது தேர்வுக்கு தயார் படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என கூறப்பட்டது. இதற்காக 1-ந் தேதியான இன்றே அரசு பள்ளிகளை திறக்க முடிவு கல்விதுறை முடிவு செய்தது.

கேரளாவில் 2077 மேல்நிலை பள்ளிகளும், 3118 உயர் நிலை பள்ளிகளும் உள்ளன. இதில் பிளஸ் -2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பயிலும் மாணவர்கள் 7 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு மட்டும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன.

வகுப்புகளில் மாணவர்களின் வருகை பதிவு எடுக்கப்படவில்லை.பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரவிரும்பிய மாணவர்கள் மட்டும் வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து வகுப்புகளிலும் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன.

பிளஸ் -2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு இதுவரை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட பாடங்களில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

மேலும் பொதுதேர்வை எதிர்கொள்வது, தேர்வுக்கு தயாராவது குறித்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்து கூறினர்.

அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி ஒன்பது மாதங்களுக்கும் பிறகு பள்ளிகள் இன்று திருவனந்தபுரத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.

“இவ்வளவு காலத்திற்குப் பிறகு மாணவர்களைப் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் & மற்ற அரசின் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன” என்று ஒரு ஆசிரியர் தெரிவித்தார்.

கர்நாடகம்

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவல் தொடங்கியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும் இந்த கல்வி ஆண்டில் ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கர்நாடகத்தில் பள்ளி, பி.யூ.சி. கல்லூரிகளை திறக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு, பி.யூ.சி. 2-ம் ஆண்டுகள் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன.

இதையொட்டி பள்ளி, பி.யூ.சி. கல்லூரிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதாவது பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாணவ-மாணவிகள் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

அதுபோல் கிருமிநாசினி தெளித்தும் பள்ளி வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டு இருந்தது. மேலும் முகக்கவசம் அணிந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர்.

அசாம்

அசாம் மாநிலத்தில் கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. அசாம் மாநிலத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், பி.யூ.கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளும் தொடங்கியுள்ளன.

6,7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிப்புறக் கல்வித் திட்டத்தின் (வித்யாகமா) மூலம் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் வகுப்புகள் நடக்காமல் இருந்தது. இதன் காரணமாக வகுப்பறைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page