மாமல்லபுரம் வந்த இங்கிலாந்து சுற்றுலா பயணி கொரோனாவுக்கு பலி

Spread the love

மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் தங்கி இருந்த இங்கிலாந்து நாட்டு பயணி கொரோனா தொற்று பாதிப்பால் பரிதாபமாக இறந்தார்.


சென்னை,

இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரைச் சேர்ந்தவர் லியோரிகுரூஷ் (வயது 90). இவர், இங்கிலாந்து, இந்தியா என இரு நாட்டில் தங்குவதற்கான இரட்டை குடியுரிமை பெற்றவர். லண்டனில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கொல்கத்தா வந்து தங்கி இருந்தார்.

 

அங்கிருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகருக்கு சுற்றுலா வந்த அவர், அங்குள்ள கோவளம் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

லியோரிகுரூசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அதிகமாகி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

நுரையீரல் தொற்று

இதற்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நுரையீரலில் வைரஸ் தொற்று அதிகம் பரவியதால் நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துக்கு அவரது இறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் கொரோனா நோயாளிகளை எரியூட்டும் மறைமலைநகரில் உள்ள இடுகாட்டில் எரியூட்டப்பட்டது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page