டெல்லியில் இருந்து 68 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் உள்பட மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தன

Spread the love

டெல்லியில் இருந்து 68 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் உள்பட மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தன.

ஆலந்தூர்,

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன், வென்டிலேட்டா் மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பெருமளவு வரவழைத்து வருகிறது. அதன்படி டெல்லியில் இருந்து 2 இந்திய விமானப்படை விமானங்கள் 3 டன் மருத்துவ உபகரணங்களுடன் சென்னை பழைய விமான நிலையம் வந்தன. இதில் 68 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள், 45 வென்டிலேட்டா்கள், 2 லட்சம் முக கவசங்கள், 1 லட்சம் கொரோனா பரிசோதனை உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வந்தன.

 

சென்னை வந்த மருத்துவ உபகரணங்கள் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் அவற்றை வாகனங்களில் ஏற்றி சென்னை ஓமந்தூராா் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனா்.

மேலும் விமானங்களில் டெல்லி, நாக்பூர் ஆகிய நகரங்களில் இருந்து மருத்துவ உபகரணங்கள் பெருமளவு தமிழகம் வர இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page