97-வது பிறந்த நாள்: கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

Spread the love

கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்-அமைச்சர் இன்று துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், கருணாநிதி நினைவிடத்தில் ‘போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்’ என அலங்கரிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

உடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி, சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page