பிரதமர் வீட்டுமுன் தர்ணா செய்ய முயன்ற காங்கிரஸ் தலைவர் போலீசார் தடுத்ததால் சொந்த வீட்டில் போராட்டம்

Spread the love

டெல்லியில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருகிறது.


புதுடெல்லி,

டெல்லியில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் போதிய அளவில் இல்லை என கூறப்படுகிறது.

எனவே இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக போதிய மருந்துகளை ஏற்பாடு செய்யக்கோரி பிரதமர் மோடியின் வீட்டுமுன் போராட்டம் நடத்துவதற்காக டெல்லியை சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் சர்மா முயன்றார்.ஆனால் போராட்டத்துக்காக வீட்டில் இருந்து கிளம்பிய அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும், வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கவில்லை எனவும் பின்னர் அவர் புகார் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து தனது வீட்டிலேயே அவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். 48 மணி நேரத்துக்குள் இந்த மருந்துகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால் பிரதமர் வீட்டுமுன் நிச்சயம் போராடுவேன் எனவும் அவர் அறிவித்து உள்ளார்.

இந்த நிகழ்வால் மேற்கு டெல்லி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page