மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

Spread the love

மும்பை,

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் உயிர்கொல்லி கொரோனா வைரசால் மராட்டியம் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்த நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

மராட்டியத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,218 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் மும்பையில் மட்டும் 355 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதனால், மும்பையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,445 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page