மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

Spread the love

மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள சூழலில், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page