மே -1 தொழிலாளர் தினம் என் .ஆர் .தனபாலன்  வாழ்த்து 

Spread the love

சென்னை -ஏப்.30 :- தொழிலாளர்கள் தினத்தை  முன்னிட்டு பெருந்தலைவர்மக்கள் கட்சித்தலைவர் என் .ஆர் .தனபாலன்  வாழ்த்து தெரிவித்துள்ளார் . அவர் வெளியிட்டுள்ள  வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-

உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களை போற்றிக் கொண்டாடும்தினம் மே மாதம் முதல் நாளாகும். உடல் உழைப்பை கொடுத்து தேசத்தைகாக்கும் விவசாயிகள், நாட்டு மக்களின் மானத்தை காக்கும் நெசவாளர்கள்,ஆலையில் உழைக்கும் தொழிலாளர்கள் ,மூட்டைதூக்கும் பாட்டாளிகள்என தங்களது உடல் உழைப்பின் மூலம் தேசத்தை காத்து நிற்கும் உழைக்கும்வர்கத்தினரை போற்றுவோம் .

இதுபோன்று இன்னும் எத்தனையோ தொழிளார்களை போற்றும் நேரத்தில்அவர்கள் வறுமையில் வாழ்கின்ற பரிதாபமான நிலையில் தான் உள்ளார்கள் .தங்களின் வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் ஒவ்வொரு தொழிலாளியின்குடும்பமும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்றுஅவர்களின்வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்.

கொரோனாவின் பிடியில் சிக்கிதவிக்கும் தொழிலாளர்கள் முழுமையாக விடுபட்டு வறுமையை வென்று வாழ்க்கையில் நோயின்றி நீண்ட ஆயுளுடன் தங்களின் குடும்பத்திற்காகவும் நாட்டிற்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன்வாழ  வேண்டும் .

தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையவும் கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக விடுபடவும் இந்நன்னாளில் வாழ்த்துகிறேன் .இவ்வாறு என் ஆர் தனபாலன் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page