அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

Spread the love

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 47 நாட்கள் ஆகியுள்ளது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை அமலில் இருக்க உள்ளது.

ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் ஒருவாரமே எஞ்சியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளதே தவிர கட்டுக்குள் வந்த பாடில்லை. இதற்கிடையில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.

இத்தகைய சூழலில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு தொடர்பாக இந்தக்கூட்டத்தில் முதல் மந்திரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page