சிறு குறு தொழில்களுக்கு பிணையின்றி கடனுதவி; நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன்

Spread the love

சிறு குறு தொழில் துறைக்கு பிணையின்றி ரூ.3லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

*விரிவான தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிவித்திருக்கிறார்.
* சுய சார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
*இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
*தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
*வளர்ச்சியை ஏற்படுத்தவும் தன்னிறைவு உருவாக்கவும் இந்த சுயசார்பு பாரத திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
*பொருளாதார கட்டமைப்பு, தொழில்நுட்பம் போன்ற 5 தூண்களை உருவாக்குவோம்.
*மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டியிருக்கிறது.

*சிறப்பு திட்டங்கள் மூலம் இந்தியா தன்னிறைவு பெற்று உலகிற்கு உதவும்
*மின் உற்பத்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றிருக்கிறது.
*தன்னிறைவு இந்தியா என்பது உலகத்திடம் இருந்து துண்டித்துக்கொள்வது இல்லை. தன்னம்பிக்கையை அதிகரிப்பதே ஆகும்.
* நேரடி மானிய திட்டம் மக்களுக்கு மிகவும் உதவிகரமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
* அதிக அளவில் உள்ளூர் பொருட்களை உற்பத்தி செய்வதே தன்னிறைவு திட்டத்தின் நோக்கம்.

*உள்ளூர் வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க இத்திட்டம் பயன்படும்.
* மக்கள் சொல்வதை கேட்டு, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும் அரசு
*தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை இந்த காலத்தில் கைகொடுத்துள்ளன

* பிரதான் மந்திரி கிசான் திட்டம், நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது
*ரூ.20 லட்சம் கோடிக்காண திட்டங்களை அடுத்த சில நாட்களில் தொடர்ச்சியாக அறிவிப்போம்.
* இன்று 15 அறிவிப்புகள் வெளியிடப்படும்.
* மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உடனேயே இந்த கொரோனா பேரிடர் வந்திருக்கிறது.
*சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 6 அறிவிப்புகள் இன்று வெளியிடப்படும்.

*சிறு குறு தொழில் துறைக்கு பிணை இல்லாமல் ரூ.3 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.
45 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும்.
*இந்தத் திட்டத்தின் கீழ் அக்டோபர் 31 வரை சிறு குறு நிறுவனங்கள் கடன் பெறலாம்.
*கடன் பெறும் நிறுவனங்கள் முதல் ஒரு ஆண்டுக்கு கடனை திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
* கடன் வசதியை பெற ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page