பாகிஸ்தானில் ஊரடங்கில் தளர்வு- உள்நாட்டு விமானங்கள் இயங்க அனுமதி

Spread the love

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்க ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இஸ்லமபாத்,

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கத்தொடங்கியதும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக உள்நாட்டு, சர்வதேச விமானப்போக்குவரத்தை அந்நாடு முடக்கியது. கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையிலும், ஊரடங்கு காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்துவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இதன்படி, உள்நாட்டு விமான சேவையையும் பகுதியளவு செயல்பட பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கராச்சி, லாகூர், இஸ்லமாபாத், குவெட்டா, பெஷாவார் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து உள்நாட்டு விமானங்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமானங்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் உடல் வெப்ப நிலை பரிசோதனை, உடல் நலம் பற்றிய சுய தகவல் ஆகியவை பெற்ற பிறகே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுவார்கள். விமானங்களில் 50 சதவித அளவுக்கே பயணிகள் பயணிக்க அனுமதி அளிக்கப்படும் போன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படும் என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,799-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 834- பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page