கொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல் வெளிப்படைத்தன்மையுடன், பொறுப்புடன் பணியாற்றி வருகிறோம் என சீன அதிபர் ஜி ஜின்பிங் உலக சுகாதார கூட்டத்தில் உரையாற்றினார்.
ஜெனீவா, சுவிட்சர்லாந்து:
சீனாவின் உகான் நகரின் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் லடசக்கணக்கானவர்களை பலி கொண்டுள்ளது. சீனா உகான் நகரில் தோன்றிய கொரொனா வைரசுக்கு எதிராகசரியான நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிப்புவிவரங்களை மறைத்து உள்ளது என உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. ஆனால் உலக சுகாதார அமைப்பு சீனா சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்து உள்ளது என பாராட்டியது.
இதனால் அமெரிக்கா உலகசுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தியது. ஆனால் சீனா உலக சுகாதாரா அமைப்புக்கு மேலதிக நிதி வழங்கியது
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த உலக சுகாதார சட்டமன்றத்தில் வரைவுத் தீர்மானம் கொடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கை குறித்து சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக 73 வது உலக சுகாதார சட்டமன்றத்திற்கு (WHA) முன்மொழியப்பட்ட வரைவுத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட 62 நாடுகள் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த கூட்டு முயற்சியை ஆதரித்து உள்ளன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தொற்றுநோய் தொடர்பான அவற்றின் காலக்கெடு” பற்றிய விசாரணையைத் தவிர, கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து பக்கச்சார்பற்ற, சுயாதீனமான மற்றும் விரிவான விசாரணைக்கு இந்த வரைவு அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பின் ஒருங்கிணைந்த சர்வதேச சுகாதார நடவடிக்கையில் இருந்து பெற்ற அனுபவங்களையும், கற்றுக்கொண்ட பாடங்களையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் -உலக சுகாதார கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக சீனா எடுத்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
ஆரம்பம் முதலே நாங்கள் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன், பொறுப்புடன் பணியாற்றி வருகிறோம் என்று ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும், எவ்வாறு இது கையாளப்பட்டது என உலக அளவில் முழுமையான ஆய்வு நடத்தவேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார்.
மேலும் இந்த விசாரணை உலகம் முழுவதும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திய பிறகு ஆய்வு குறிக்கோளுடன், பாரபட்சமில்லாமல், நடுநிலைமையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.