கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நம்பிக்கை

Spread the love

கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை வெற்றியடைந்தால், அது செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

லண்டன்

லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள, கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை வெற்றியடைந்தால், அது செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த தடுப்பு மருந்து முதல் கட்டமாக, நல்ல பலனை அளித்துள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த மருந்தை குரங்குகளின் உடலில் செலுத்தி, சோதனை செய்தபோது, கொரோனா வைரசால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை, தடுத்து நிறுத்தியிருப்பது உறுதி செய்யப்படுள்ளதாகவும், அதேசமயம், இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை எனவும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்தானது புகையிலையின் இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்டது என ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்தானது மனிதர்களைப் போன்ற நோய் எதிர்ப்பு அமைப்புக் கொண்ட ரெகுசுஸ் மகாக்யூச் என்னும் குரங்கு வகைகளில் சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

குரங்குகளில் செய்யப்பட்ட சோதனை நேர்மறையான விளைவுகளை தந்துள்ளதால் முறையான அனுமதி பெற்ற பின்பு மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தினசரி செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வர்த்தக செயலாளர் அலோகா சர்மா, இங்கிலாந்துக்கு முதலில் ஒரு தடுப்பூசி விநியோகிக்க ஒரு மருந்து நிறுவனத்துடன் பல்கலைக்கழகம் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது

ஒப்பந்தம் என்றால், ஆக்ஸ்போர்டு சோதனைகள் வெற்றிகரமாக இருந்தால், செப்டம்பர் மாதத்திற்குள் இங்கிலாந்தில் ஒரு தடுப்பூசி கிடைக்கக்கூடும் என கூறினார்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அதன் கொரோனா தடுப்பூசி சோதனையை கண்காணிக்க வீடியோ அழைப்புகளைப் பயன்படுத்துகிறது. வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தும் ஆராய்ச்சியாளர்கள் இப்போது வீடியோ அழைப்புகள் மூலம் சோதனை பங்கேற்பாளர்களை சந்திக்கிறார்கள்.

1,000 க்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய இந்த சோதனை, நேருக்கு நேர் சந்திப்புகளை மாற்ற ஆக்ஸ்போர்டு ஸ்டார்ட்-அப் நெய் ஹெல்த் தயாரித்த வீடியோ அழைப்பு மென்பொருளைப் பயன்படுத்துகிறது.

தடுப்பூசி சோதனைகள் பொதுவாக நேருக்கு நேர் சந்திப்புகளை நம்பியுள்ளன, ஆனால் ஊர்டங்கால் அவ்வாறு நடத்துவது கடினமாகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page