விரைவில் கொரோனா பிடியில் இருந்து விடுதலை:நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசி ரெடி

Spread the love

கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசியை அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா கண்டுபிடித்து உள்ளது.

வாஷிங்டன்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை, மேலும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி உருவாக்க 12-18 மாதங்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா இன்க் நிறுவனத்தின் ஒரு பரிசோதனை தடுப்பூசி, கொரோனா வைரஸைத் தடுக்க ஒரு நோயெதிர்ப்பு அமைப்பு நடவடிக்கையை உருவாக்க முடியும் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டி உள்ளது, மேலும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சியில் தற்காலிக நம்பிக்கையை அளிக்கிறது.

வேகமாக பரவும் கொரோனா வைரசுக்கு சிகிச்சையை உருவாக்கும் முயற்சிகளில் மாடர்னா இன்க் நிறுவனத்தின் தடுப்பூசி முன்னணியில் உள்ளது கடந்த வாரம், ஒழுங்குமுறை மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்காக அமெரிக்க சுகாதார நிறுவனத்தின் “பாஸ்ட் டிராக்” லேபிளை இந்த நிறுவனம் வென்றது. ஜூலை மாதத்தில் ஒரு பெரிய சோதனையைத் தொடங்க மாடர்னா திட்டமிட்டு உள்ளது.

தேசிய சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்வின் ஆரம்ப முடிவுகளின்படி. மாடர்னாவின் தடுப்பூசி வழங்கப்பட்ட எட்டு நோயாளிகளில் கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களின் இரத்த மாதிரிகளில் ஆன்டிபாடி அளவுகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.

மருந்து ஆய்வில் 45 பேர் பங்கேற்றனர். தடுப்பூசியின் மூன்று வெவ்வேறு அளவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன, மேலும் இது நோயெதிர்ப்புத் தன்மையின் அளவைச் சார்ந்து அதிகரிப்பதைக் கண்டதாகவும், உடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் திறன் இருப்பதாகவும் மோடெர்னா கூறி உள்ளது.600 நோயாளிகளுடன் இரண்டாம் கட்ட சோதனை விரைவில் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் கூறியதாவது:-

கொரோனா வைரஸை தடுக்கக்கூடிய ஆன்டிபாடியை நாங்கள் உருவாக்குகிறோம் என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி. தடுப்பூசியின் அளவை எடுத்து அதன் செயல்திறனை மேலும் ஆய்வு செய்வதற்கான ஒரு பெரிய சோதனைக்கான திட்டங்களுடன் நிறுவனம் முன்னேறி வருகிறது.

தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் முதலீடு செய்கிறோம், எனவே சார்ஸ், கோவ்-2 விலிருந்து எங்களால் முடிந்தவரை மக்களைப் பாதுகாக்க உதவுவதற்காக நாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய அளவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று கூறினார்.

நிறுவனம் தனது தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய சுவிஸ் ஒப்பந்த மருந்து தயாரிப்பாளர் லோன்சா குரூப் ஏஜி மற்றும் அமெரிக்க அரசுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

மாடர்னா பங்குகள் நியூயார்க்கில் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

பெரும்பாலான தடுப்பூசிகள் ஒரு வைரஸின் செயலற்ற பகுதி அல்லது மரபணு பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட வைரஸிலிருந்து வரும் புரதங்களைக் கொண்டிருக்கின்றன. உடலில் செலுத்தப்படும்போது, ​​அவை பாதிக்கப்பட்டு மீண்ட நபருக்கு ஒரு நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்றன.

இதற்கு நேர்மாறாக, மாடர்னா மற்றும் பலர் பயன்படுத்தும் எம்ஆர்என்ஏ தொழில்நுட்பம் வைரஸ் புரதங்களை உருவாக்க உடலின் சொந்த செல்களை நம்பியுள்ளது. உடலில் செலுத்தப்பட்டதும், ஆர்.என்.ஏ மனித உயிரணுக்களில் நழுவி வைரஸ் போன்ற புரதங்களை உருவாக்கச் கட்டளையிடுகிறது. இந்த விஷயத்தில் கொரோனா வைரஸின் மேற்பரப்பில் உள்ள “ஸ்பைக்” புரதம். தடுப்பூசி செயல்பட்டால் பாதுகாப்பு ஆன்டிபாடிகளை உருவாக்க உடலைத் தூண்டுகின்றன.

தொழில்நுட்பம் புதியது மற்றும் இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியில் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், இது ஆராய்ச்சியாளர்களை விரைவாக சோதனைகளுக்கு நகர்த்த அனுமதிக்கிறது.

சீன விஞ்ஞானிகள் ஜனவரி மாதத்தில் வைரசிற்கான மரபணு வரிசையை வெளியிட்டவுடன் மாடர்னா தனது கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இறங்கியது. பிப்ரவரி பிற்பகுதியில், மாடர்னாவின் விஞ்ஞானிகள் ஏற்கனவே அமெரிக்க தேசிய சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர்களுக்கு முதல் தொகுதி தடுப்பூசிகளை வழங்கி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page