ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் புதிதாக 5 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் 5 டாக்டர்களுக்கு கொரோனா
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் புதிதாக 5 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 டாக்டர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஸ்ரீநகரின் ஹப்பா கடல் பகுதியை சேர்ந்த 29 வயது பெண்ணுக்கு காதில் ஏற்பட்ட அலர்ச்சி நோய்க்கு, அங்குள்ள ஸ்ரீமகாராஜ ஹரிசிங் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.