ரஷியாவில் 8,849 பேருக்கு கொரோனா உறுதி; சீனாவில் மேலும் 33 பேருக்கு கொரோனா

Spread the love

ரஷியாவில் 24 மணி நேரத்துக்குள் 8,849 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவில் 24 மணி நேரத்துக்குள் 8,849 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதில் 3,716 பேர் நோய் அறிகுறி இல்லாமலேயே கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் புதிதாக 127 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கையும் 3,100-ஐ நெருங்கி உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி, அதில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,681 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவை அடுத்து சீனாவில் மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 31 பேருக்கு எந்த அறிகுறியும் இன்றி நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த புதிய நோயாளிகளில், முதன்முதலில் கொரோனா தோன்றிய உகான் நகரில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82 ஆயிரத்து 967 ஆக உயர்ந்துள்ளது. 4 ஆயிரத்து 634 பேர் பலியாகி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page