ரகசிய குறியீட்டை சுமந்து கொண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பறந்து வந்த ‘உளவு புறா’

Spread the love

ரகசிய குறியீட்டை சுமந்து கொண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ‘உளவு புறா’ ஒன்று பறந்து வந்துள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தின் ஹிரா நகர் பகுதியில் உள்ள மன்யாரி கிராமத்துக்குள் புறா ஒன்று புகுந்துள்ளது. அந்த புறாவை உடனடியாக போலீசிடம் ஒப்படைத்த கிராம மக்கள், பாகிஸ்தானில் இருந்து அது பறந்து வந்ததாக தெரிவித்தனர்.

அந்த புறாவின் ஒரு காலில் சில எண்கள் குறியீடு அடங்கிய மோதிரம் ஒன்று இருந்ததாகவும், அதனை கைப்பற்றி அதில் எழுதப்பட்டு இருக்கும் ரகசிய தகவல் என்னவென்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த புறா உளவு பார்க்கும் பயிற்சியை பாகிஸ்தானில் பெற்றிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர். இந்தியாவுக்குள் ஊடுருவ ஏராளமான பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தயாராக இருப்பதாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்து வந்த நிலையில், தற்போது ரகசிய குறியீட்டை சுமந்துகொண்டு பாகிஸ்தானில் இருந்து ‘உளவு புறா’ ஒன்று இந்திய எல்லைக்குள் புகுந்து இருப்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. அந்த ரகசிய தகவல் இந்தியாவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page