கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உறவின் முறை சங்கங்கள் உதவ வேண்டும் S.A .சுபாஷ் பண்ணையார் வேண்டுகோள்.   

Spread the love

 

நாடார் சங்கங்கள் நமது   சமுதாய மக்களின்   வளர்ச்சிக்காகயும்,  சமுதாயத்தை மேம்படுத்தி   மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கு  உருவாக்கிய நமது முன்னோர்கள் சமுதாய மக்களுக்காக  பல வழிகாட்டுதலை வகுத்து தந்திருக்கிறார்கள் அதன் அடிப்படையில் இன்று
சங்கம் பல பிரச்சனைகளில் மக்களுக்கு பல வழிகளில் உதவி வருகிறது.  இன்று கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்   மக்கள்  பல பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர்.
 பனை தொழிலாளர்கள் மற்றும்  தின கூலித்தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது  பாதிக்கப்பட்ட  நமது  மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக அனைத்து பகுதிகளில் உள்ள நமது நாடார் உறவின்முறை சங்கங்கள் அவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று பனங்காட்டு மக்கள் கழக தலைவர் S.A . சுபாஷ் பண்ணையார் நாடார்  உறவின் முறை சங்கங்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page