தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத அரசு பேருந்துகள் நாளை முதல் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில், தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.
60 சதவீத பயணிகளுடன் இயங்குவது சாத்தியம் இல்லை என்று அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. காலாண்டு வரியைத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட தங்களது கோரிக்கை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே பேருந்துகள் இயங்கும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.