தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா

Spread the love

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இன்று (ஏப்.,03) ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று(ஏப்.,2) வரை 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் தேசிய அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்தது.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தில், 3,684 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் 2,789 பேருக்கு கொரோனா இல்லை. 411 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 484 பேரின் முடிவுகள் வர வேண்டியுள்ளது. இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இன்று மட்டும் 102 பேருக்கு மட்டும் கொரோனா உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page