மராட்டியத்தில் அதிகாரிகள் உள்பட 33 போலீஸ்காரர்கள் கொரோனாவுக்கு பலி

Spread the love

மராட்டியத்தில் அதிகாரிகள் உள்பட 33 போலீஸ்காரர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மும்பை,

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு சுமார் 83 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. அங்கு கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை மராட்டியத்தில் அதிகாரிகள் உள்பட 33 போலீஸ்காரர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,562 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா ஒரு புறத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திவரும் வேளையில், ஊரடங்கை கடைப்பிடிக்க வலியுறுத்தும்போது பொதுமக்களும் போலீஸ்காரர்களை தாக்கும் சம்பவமும் அங்கு தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. ஊரடங்கு காலத்தில் மட்டும் 260 போலீசார் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 86 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 841 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page