தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

Spread the love

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி,கோவை,தேனி மற்றும் திண்டுக்கல்,மாவட்டங்களிலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மனி நேரத்தில் பெய்த மழை விபரம்: ( சென்டிமீட்டரில்)

வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஜூன் 9 முதல் 11 வரை மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திரா கடலோர பகுதி சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வீசும்.

ஜூன் 9 முதல் ஜூன் 13 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதி பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வீசும்.

ஜூன் 11 மற்றும் ஜூன் 12 லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப்பகுதி சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வீசும்.

ஜூன் 13 கேரளா மற்றும் கர்நாடக கடலோரப்பகுதி சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வீசும்.

கடல் அலை 3.0 முதல் 3.4 மீட்டர் வரை குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ் கோடி வரை ஒருசில நேரங்களில் எழும்பக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்ட்ச வெப்பநிலை 38 டிகிரி குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page