புதிதாக 1,927 பேரை தாக்கியது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 36,841 ஆக உயர்வு மேலும் 19 பேர் உயிரிழப்பு

Spread the love

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 36,841 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று மட்டும் 1,927 பேரை தாக்கியது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தலைநகர் சென்னையில் நங்கூரம் போன்று முகாமிட்டு பொதுமக்கள் மீது மறைமுக தாக்குதலை கொரோனா தொடுத்து வருகிறது. அன்றாடம் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொடுகிறது. 10 நாட்களில் மட்டும் 14 ஆயிரத்து 508 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் இருந்து 1,897 பேரும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 30 பேர் என மொத்தம் 1,927 பேர் நேற்று பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது.

19 பேர் பலி

தமிழகத்தில் நேற்று 1,162 ஆண்கள், 765 பெண்கள் என 1,927 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் 22 ஆயிரத்து 828 ஆண்கள், 13 ஆயிரத்து 996 பெண்கள் மற்றும் 3-ம் பாலினத்தவர்கள் 17 பேர் என 36 ஆயிரத்து 841 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ள மருத்துவமனையில் 17 ஆயிரத்து 179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

19 ஆயிரத்து 333 பேர் சிகிச்சை பலனாக கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். நேற்று மட்டும் 1,008 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சை பலனின்றி இதுவரையில் 326 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று மட்டும் 19 உயிர்கள் பறிபோய் உள்ளது. இதில் சென்னையை சேர்ந்த 16 பேரும், செங்கல்பட்டை சேர்ந்த 3 பேரும் அடங்குவர். இறந்தவர்களில் 12 பேர் அரசு மருத்துவமனையிலும், 7 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.

30 மாவட்டங்கள்

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் நேற்று புதிதாக நோய் தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் சென்னையில் 1,392 பேரும், செங்ல்கல்பட்டில் 182 பேரும், திருவள்ளூரில் 105 பேரும், காஞ்சீபுரத்தில் 33 பேரும், திருவண்ணாமலையில் 26 பேரும், ராணிப்பேட்டையில் 25 பேரும், தூத்துக்குடியில் 24 பேரும், திருவாரூரில் 14 பேரும், திருச்சியில் 12 பேரும், வேலூரில் 11 பேரும், கன்னியாகுமரி, மதுரையில் தலா 10 பேரும், தேனியில் 9 பேரும், ராமநாதபுரத்தில் 8 பேரும், விழுப்புரம், நெல்லை, கடலூரில் தலா 7 பேரும், புதுக்கோட்டை, விருதுநகரில் தலா 5 பேரும், நாமக்கல், நாகப்பட்டினம், தர்மபுரி, கள்ளக்குறிச்சியில் தலா 4 பேரும், திண்டுக்கலில் 3 பேரும், தஞ்சாவூர், சிவகங்கை, சேலத்தில் தலா 2 பேரும், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரியில் தலா ஒருவரும் இடம் பிடித்து உள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 94 குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட 243 முதியவர்கள் நேற்று கொரோனா தொற்றில் சிக்கினர். இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 1,933 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 ஆயிரத்து 58 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 152 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 60 பேரும், ரெயில் மூலம் வந்த 294 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,438 பேரும், கப்பல் மூலம் துறைமுகம் வந்த 3 பேர் என மொத்தம் 1,947 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்ச பரிசோதனை

தமிழகத்தில் இதுவரை 44 அரசு நிறுவனங்களுக்கும், 33 தனியார் நிறுவனங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த பரிசோதனை மையங்களில் இதுவரை 6 லட்சத்து 38 ஆயிரத்து 846 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 17 ஆயிரத்து 675 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page