பிரேசிலில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா; பாதிப்பில் உலகின் இரண்டாவது நாடாக மாறியது

Spread the love

ஒரே நாளில் 25 ஆயிரம்பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதனால் கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளனான உலகின் இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது.

பிரேசிலியா

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி உலகில் 76 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறைந்தது 424,000 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பிரேசிலின் கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று இங்கிலாந்தை முந்தியது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளனான உலகின் இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் மொத்தம் 828,810 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, கடந்த 24 மணி நேரத்தில் 25,982 புதிய தொற்றுநோய்களும், மேலும் 909 இறப்புகளும் இறப்புகளும் பதிவாகி உள்ளது அங்கு மொத்த இறப்பு எண்ணிக்கை 41,828 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்புகளில் இருந்து 365,063 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page