கொரோனா பாதிப்பு:ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவுக்கு ரூ.5712 கோடி கடன் உதவி

Spread the love

கொரோனா பாதிப்பை எதிர்த்து போராட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவுக்கு ரூ.5712 கோடி கடன் உதவி வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது.

பீஜிங்

சீனா ஆதரவில் இயங்கும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) இந்தியாவுக்கு 750 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5712 கோடி) கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு உதவும் என வங்கி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இணை நிதியுதவி திட்டம் வணிகங்களுக்கான பொருளாதார உதவியை வலுப்படுத்துதல், சமூக பாதுகாப்பு வலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சுகாதார சேவையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மே மாதத்தில், தொற்றுநோய்க்கு இந்தியாவின் அவசரகால தேவைக்கு உதவ வங்கி 500 மில்லியன் டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்தது.இந்த இரண்டு கடன் உதவிகளும் பொது மற்றும் தனியார் துறைகள் கொரோனா தொட்டை எதிர்த்துப் போராட உதவும் என்று வங்கி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page