கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை: போலீஸ் அதிகாரி மீது கொலை குற்றச்சாட்டு பதிவு

Spread the love

கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், போலீஸ் அதிகாரி மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாசிங்டன்,

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி கைது நடவடிக்கையின்போது போலீஸ் அதிகாரி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதில் ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசாரின் விரோத செயலை கண்டித்தும் நிறவெறிக்கு எதிராகவும் அமெரிக்காவில் பெரும் அளவில் போராட்டங்கள் வெடித்தன.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 12-ந் தேதி ஜோர்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் ரேய்ஷர்ட் புரூக்ஸ் (வயது 27) என்ற கருப்பின வாலிபர் போலீஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது அமெரிக்காவில் மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்தியது.

ரேய்ஷர்ட் புரூக்சை சுட்டுக்கொன்ற காரெட் ரோல்பி (27) என்று போலீஸ் அதிகாரி உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக அட்லாண்டா நகரின் மேயர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ரேய்ஷர்ட் புரூக்ஸ் கொள்ளப்பட்ட வாரத்தில் போலீஸ் அதிகாரி காரெட் ரோல்பி மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது காரெட் ரோல்பியுடன் இருந்த மற்றொரு போலீஸ் அதிகாரியான டெவின் புரோஸ்னன் (26) இது மோசமான தாக்குதல் மற்றும் பதவி பிரமாணத்தை மீறியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page