இந்தியாவில் தினசரி கொரோனா பரிசோதனை 2 லட்சத்தை நெருங்குகிறது

Spread the love

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா சோதனை திறனை அதிகரிக்குமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

புதுடெல்லி

உலகளாவிய அளவில், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,637,901 ஆக உயர்ந்துள்ளது, அமெரிக்காவில் அதிகமாக 2,219,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் உலக இறப்பு எண்ணிக்கை 4.59 லட்சத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 14 516 ஆக உள்ளது.இதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,95,048ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 375 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள்மொத்த எண்ணிக்கை 12,948ஆக உயர்ந்து உள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,13,831 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கொரோனா சோதனை திறனை அதிகரிக்குமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்க்காக மொத்தம் 66,16,496 மாதிரிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பரிசோதித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 1,89,869 மாதிரிகளை பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page