கர்நாடகாவில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Spread the love

கர்நாடகாவில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

சீனாவில் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மராட்டியத்தில் தான் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு நாளும் பாதித்தோரின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நேற்று மாநிலத்தில் புதிதாக 416 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8,569 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9,150 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,391 பேர் குணமடைந்துள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page