பீஜிங்கில் 23 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

Spread the love

சீன தலைநகர் பீஜிங்கில் 23 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

பீஜிங்,

சீன தலைநகர் பீஜிங்கில் பன்னாட்டு குளிர்பான கம்பெனியான ‘பெப்சி‘யின் கிளை உள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ‘பெப்சி‘ கம்பெனியின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சீனாவில், முதலில் கொரோனா தோன்றிய உகான் நகரில் ஒவ்வொருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு சோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே, கடந்த மாதம் 30-ந் தேதியில் இருந்து தலைநகர் பீஜிங்கிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதனால், அங்கு வசிப்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கான மாதிரி சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 11-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிவரை, 22 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, உணவு வினியோக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவற்றின் ஊழியர்களை குறிவைத்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதில், 227 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரு இந்திய உணவகத்தின் உரிமையாளர், தனது ஊழியர்களுக்கு தொற்று இல்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page