இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி

Spread the love

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் அமெரிக்கா நியூஜெர்சியில் புதிதாக கட்டபட்ட நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தனர்

நியூசெர்சி

அமெரிக்காவின் நியூசெர்சி நகரி வசித்து வந்த இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் பாரத் படேல் (வயது 62) அவரது 33 வயது மருமகள் நிஷா படேல் மற்றும் அவரது 8 வயது மகள் ஆகியோர் தங்கள் வீட்டின் பின்பகுதியில் புதிதாக கட்டபட்ட நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலில்ன் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முதல் கட்ட விசாரணையில் அவர்கள் நீரில் மூழ்கி இறந்ததாக முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அந்த குடும்பத்தினர் கடந்த மாதம் தான் ஐந்து படுக்கையறை வீட்டை விலைக்கு வாங்கி உள்ளனர். இறக்கும் போது மற்ற குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்குள் இருந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page