ஒரே நாளில் 3,793 பேர் ‘டிஸ்சார்ஜ்’ தமிழகத்தில் 8 நாளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்தது 3,827 பேருக்கு தொற்று; 61 பேர் சாவு

Spread the love

தமிழகத்தில் 8 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்தது. ஒரே நாளில் 3 ஆயிரத்து 793 பேர் குணமடைந்தனர். நேற்று 3,827 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 61 பேர் உயிரிழந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 33 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 34 பேரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரசு மருத்துவமனையில் 46 பேரும், தனியார் மருத்துவமனையில் 15 பேர் என மொத்தம் 61 பேர் நேற்று உயிரிழந்தனர். 11 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 30 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், மதுரையில் 7 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், திருவண்ணாமலை, காஞ்சீபுரத்தில் தலா 3 பேரும், விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, விழுப்புரம், தூத்துக்குடியில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து கொரோனா உயிரிழப்பு 1,571 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 3 ஆயிரத்து 793 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரை 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 46 ஆயிரத்து 833 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுள்ளனர். இந்த பட்டியலில் சென்னையில் 1,747 பேரும், மதுரையில் 245 பேரும், செங்கல்பட்டில் 213 பேரும், காஞ்சீபுரத்தில் 182 பேரும், திருவள்ளூரில் 175 பேரும், தேனியில் 119 பேரும், தூத்துக்குடியில் 109 பேரும், விருதுநகரில் 86 பேரும், நெல்லையில் 84 பேரும், கன்னியாகுமரியில் 78 பேரும், ராமநாதபுரத்தில் 69 பேரும், கோவையில் 60 பேரும், விழுப்புரத்தில் 58 பேரும், சிவகங்கையில் 51 பேரும், வேலூரில் 49 பேரும், ராணிப்பேட்டையில் 45 பேரும், கள்ளக்குறிச்சியில் 41 பேரும், ஈரோடு, சேலத்தில் தலா 40 பேரும், திருவண்ணாமலையில் 37 பேரும், திருச்சியில் 32 பேரும், நாகப்பட்டினத்தில் 30 பேரும், நீலகிரியில் 26 பேரும், புதுக்கோட்டையில் 25 பேரும், திண்டுக்கலில் 24 பேரும், திருப்பத்தூரில் 22 பேரும், கடலூரில் 21 பேரும், தென்காசியில் 20 பேரும், திருப்பூரில் 16 பேரும், கிருஷ்ணகிரியில் 15 பேரும், திருவாரூரில் 14 பேரும், தர்மபுரியில் 12 பேரும், அரியலூர், தஞ்சாவூரில் தலா 7 பேரும், கரூர், நாமக்கல்லில் தலா 4 பேரும், பெரம்பலூரில் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 28-ந்தேதி அன்று நிலவரப்படி 3,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் 8 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு இறங்குமுகத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில், சென்னையில் நேற்று முன்தினம் வரை முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை சென்னையில் குறைய தொடங்கியது. இருந்த போதிலும் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 17 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 1,082 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 573 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தற்போது 24 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page