டிக் டாக் நிறுவனத்தை வாங்கும் திட்டம் இல்லை: கூகுள் சிஇஓ

Spread the love

டிக் டாக் நிறுவனத்தை வாங்கும் திட்டம் இல்லை என்று கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.


வாஷிங்டன்,

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்-டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த மாதம் தடை விதித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பாக அண்மையில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

மேலும் டிக்டாக் நிறுவனத்தின் சொத்துக்களை, 90 நாட்களுக்குள் விற்கவும் கெடு விதித்துள்ளார். இதனிடையே அமெரிக்காவில் டிக்டாக் செயலி வர்த்தகத்தை கைப்பற்றுவதற்கு மைக்ரோசாப்ட் உள்பட பிற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், டிக்டாக்கில் சிறிய அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page