பா.இராமச்சந்திரஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்!

Spread the love

மாலைமுரசு அதிபரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மீட்புக்குழு தலைவருமான பா.இராமச்சந்திரஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு இன்று அக்டோபர்  16 ந்  தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள மாலைமுரசு பத்திரிக்கை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய படத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள்.
தலைவருடன் மாநில தலைமைநிலையசெயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,செய்தித்தொடர்பாளர் ஜி .சந்தானம்,மதியசென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர் ,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,காஞ்சி மேற்கு மாவட்ட பொருளாளர் ஏ.முருகேசபாண்டியன்,தி.நகர் தொகுதி தலைவர் அலெக்ஸ்,மற்றும் நிர்வாகிகள் முருகன்,சாதுராமன், கருணைதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page