மியான்மர் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகி கட்சி அறிவிப்பு

Spread the love

மியான்மர் நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.


யாங்கோன்,

மியான்மரில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தேர்தல் முடிவுகளை முழுமையாக தெரிவிக்க ஒரு வாரம் ஆகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் அதேசமயம் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page