“உழைப்போரே உயர்ந்தவர்”மே தின’ நல்வாழ்த்துகள் S.A .சுபாஷ் பண்ணையார்

Spread the love

தொழிலாளர்கள் தினத்தை  முன்னிட்டு பனங்காட்டு மக்கள் கழகம் கட்சித்தலைவர் S.A .சுபாஷ் பண்ணையார்  வாழ்த்து தெரிவித்துள்ளார் .அவர் வெளியிட்டுள்ள  வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-

உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை (மே மாதம் 1ம் தேதி) கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும்   மே தினத்தில் “உழைப்போரே உயர்ந்தவர்” என்று உரக்கச் சொல்லி, பனங்காட்டு மக்கள் கழகம் சார்பில்  வாழ்த்துகளையும், வணக்கங்களையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோன்

கொடிய நோய்த் தொற்றால் அல்லல்படும் இன்றைய உலகம், நாளை உற்சாகத்துடன் வீருகொண்டு எழுந்து, புதியதோர் உலகம் செய்யப்போவது உழைப்பாளர்களின் உழைப்பினாலேயே ஆகும்.

உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது  உளமார்ந்த `மே தின’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோன் .இவ்வாறு S.A .சுபாஷ் பண்ணையார்   தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page