கொரோனா விபரங்கள், ‘லிங்க்’; மக்களுக்கு சி.பி.ஐ., எச்சரிக்கை

Spread the love

மதுரை : கொரோனா தொடர்பான விபரங்கள் என, எஸ்.எம்.எஸ்., அல்லது இ – மெயிலில், ‘லிங்க்’ வந்தால், அதை, ‘கிளிக்’ செய்து பார்க்க வேண்டாம் என, சி.பி.ஐ., அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவ துவங்கியதையடுத்து, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கொரோனா தகவல்களை தெரிந்து கொள்ள குறிப்பிட்ட, ‘லிங்க்’கை, ‘கிளிக்’ செய்ய வேண்டும் என நிறுவனங்கள், அரசு அலுவலகங்களின் இ – மெயிலுக்கு அடிக்கடி குறுந்தகவல் வருகிறது.

தவிர, தனி நபர்களின் அலைபேசிகளுக்கும், எஸ்.எம்.எஸ்., வருகிறது. ஆர்வத்தில் அதில் உள்ள, ‘லிங்க்’கை, ‘கிளிக்’ செய்யும்போது, பார்ப்பவரின் முக்கிய தகவல்கள், வங்கி கணக்கு விபரங்கள் திருடப்படுகின்றன. இது குறித்து, தமிழக போலீசார் எச்சரித்த நிலையில், சி.பி.ஐ.,யும் எச்சரித்துள்ளது.

‘இன்டர்போல் வங்கி ட்ரோஜன்’ என்ற இந்த தீங்கிழைக்கும் சாப்ட்வேர், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விபரங்கள் உட்பட, அலைபேசியில் உள்ள அனைத்து நிதி விபரங்களையும் திருடக்கூடும் என, சி.பி.ஐ., விடுத்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page